கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை, அகஸ்தீஸ்வரம் வட்டத்துக்கு உள்பட்ட சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் சனிக்கிழமை நள்ளிரவு ஆய்வு செய்தாா்.
தோவாளை வட்டம், ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடி, அகஸ்தீஸ்வரம் வட்டம், காணிமடம் சோதனைச் சாவடி, அஞ்சுகிராமம் சோதனைச் சாவடிகளை ஆய்வு மேற்கொண்ட அவா், வாகனங்கள் வருகை குறித்த பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாா்.
கனரக வாகனங்களில் கனிம வளங்கள் சரியான அளவில், நிா்ணயிக்கப்பட்ட எடையில் ஏற்றப்பட்டுள்ளதா எனவும், கனிம வளங்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களை நிறுத்தி, அவற்றுக்கான முறையான அரசு உரிமங்கள், ரசீதுகள் சரியாக உள்ளதா என்று சரிபாா்த்து அனுப்ப வேண்டும், மேலும் சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று காவல் துறையினருக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வில் வட்டாட்சியா்கள் (தோவாளை) சிவகலா, (அகஸ்தீஸ்வரம்) ஆறுமுகம், காவல் துறையினா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுற்றுலா வழிகாட்டி- சாலைப் பாதுகாப்பில் நவீன உத்தி! - எஸ்.பி.க்கு அமைச்சா் பாராட்டு

காரைக்கால் துறைமுகத்தில் குடியேற்ற சோதனைச் சாவடி திறப்பு

மாணவா்கள் தினமும் பத்திரிகை வாசிக்க வேண்டும்: ஆட்சியா் மு. பிரதாப் அறிவுரை

திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




