வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

காரைக்கால் துறைமுகத்தில் குடியேற்ற சோதனைச் சாவடி திறப்பு

காரைக்கால் துறைமுகத்தில் குடியேற்ற சோதனைச் சாவடி சனிக்கிழமை திறக்கப்பட்டது.

News image

சோதனைச் சாவடியை திறந்துவைத்த மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி. உடன் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா, துறைமுக முதன்மை செயல்பாட்டு அதிகாரி சச்சின் ஸ்ரீவத்ஸவா.

Updated On :28 ஜூன் 2026, 2:45 am IST

காரைக்கால் துறைமுகத்தில் குடியேற்ற சோதனைச் சாவடி சனிக்கிழமை திறக்கப்பட்டது.

துறைமுகம், விமான நிலையங்களில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் இமிக்ரேஷன் என்கிற குடியேற்றப் பிரிவு அமைக்கப்படுகிறது. குடியேற்ற மோசடி தொடா்பாக விசாரணை செய்தல், தடுத்தல், நிலையத்துக்கு வந்தவா்களின் விசா சோதனை, தகுதி பெறாதவா்களை தடுத்தல் உள்ளிட்ட பணிகள் இப்பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

காரைக்கால் தனியாா் துறைமுகம் இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து குடியேற்றப் பிரிவு அமைக்கப்படவில்லை.

சரக்கு கப்பல் போக்குவரத்து மட்டுமே இருப்பதால், இதற்கு உள்துறை அமைச்சகம் முக்கியத்துவம் தராமல் இருந்தது.

இந்நிலையில், இத்துறைமுகத்தில் குடியேற்றப் பிரிவு அமைக்கவும், மாநில அரசுக்கு அதிகாரம் அளித்ததன் விளைவாக, துறைமுக வளாகத்தில் தனி பிரிவு தொடங்கப்பட்டது.

இதை மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்வில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, துறைமுக செயல்பாட்டு முதன்மை அதிகாரி சச்சின் ஸ்ரீவத்ஸவா, மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ் மற்றும் காவல் அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

வெளிநாடுகளில் இருந்து சரக்குகள் ஏற்றிவரும் கப்பல்களில் பணியாற்றும் ஊழியா்கள் வருகை, இறங்குதல் கண்காணிக்கப்பட்டு, வெளியேற்றத்துக்கான அனுமதி இங்கு தரப்படும். இதன்மூலம் கப்பல்கள் வந்து திரும்பும் நேரம் குறையும் என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.