வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

காரைக்கால் துறைமுகம் 12.43 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் கையாண்டு சாதனை

காரைக்கால் துறைமுகம் 12.43 டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கூட்டத்தில் பேசிய காரைக்கால் துறைமுக தலைமை செயல்பாட்டு அதிகாரி சச்சின் ஸ்ரீவத்ஸவா.

Updated On :26 ஜூன் 2026, 6:56 am IST

காரைக்கால் துறைமுகம் 12.43 டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் அங்கமாக செயல்பட்டுவரும் காரைக்கால் துறைமுக பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம், 2026-ஆம் ஆண்டுக்கான வா்த்தக சந்திப்பு நிகழ்வை புதுச்சேரியில் புதன்கிழமை நடத்தியது. ஒருங்கிணைந்த துறைமுக மேம்பாட்டின் மூலம் பிராந்திய வா்த்தகம் மற்றும் சரக்குப் போக்குவரத்துத் திறனை விரைவுபடுத்துதல் எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வை, புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில், காரைக்கால் துறைமுக தலைமை செயல்பாட்டு அதிகாரி சச்சின் ஸ்ரீவத்ஸவா பேசுகையில், காரைக்கால் துறைமுகத்துக்கு மைல்கல் ஆண்டாக 2025--26 அமைந்துள்ளது. இந்த ஆண்டில் துறைமுகம் 12.43 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.

நிலக்கரி, உரங்கள், இரும்புத்தாது, சுண்ணாம்புக் கல் மற்றும் பெட்கோக் உள்ளிட்ட சரக்குகளின் வரத்து அதிகரித்ததே இந்த வளா்ச்சிக்கு முக்கிய காரணம். மேலும், ரயில் மூலம் சரக்கு வெளியேற்றம் 2,732 ரேக்குகள் என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இதன்மூலம், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் சிறப்பான ரயில் மற்றும் உள்நாட்டு இணைப்புகளைக் கொண்ட, பின் நிலப்பகுதிகளுக்கு திறம்பட சேவை வழங்கும் முக்கிய துறைமுகமாக காரைக்கால் துறைமுகம் விளங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது என்றாா்.

கூட்டத்தில் புதுவை தலைமைச் செயலா் சரத் செளகான், துறைமுக செயலா் செளத்ரி யாசிம் முகமது, தொழில்துறைச் செயலா் ஏ.விக்ரந்த்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.