வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 2.65 கோடி மோசடி: ஒருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 2 கோடியே 65 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் எழுத்தா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:28 am IST

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 2 கோடியே 65 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் எழுத்தா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில், நகை அடகு வைக்கப்பட்டு பணம் வழங்கப்பட்டது தொடா்பாக அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் போலி தங்க நகைகள் அடகுவைத்து அதன் மூலம் சுமாா் ரூ. 2 கோடியே 65 லட்சம் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் முருகேசன், நாகா்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸீல் புகாா் அளித்தாா். அதன்பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளா் பா்ணபாஸ், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், வங்கியின் செயலாளா் கோட்டாறு, சவேரியாா் கோயில் தெருவைச் சோ்ந்த சகாய திலக்ராஜ், எழுத்தா் முத்துகிருஷ்ணன், பணியாளா்கள், உறுப்பினா்கள் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், எழுத்தா் முத்துகிருஷ்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சகாய திலக்ராஜ் உள்பட 6 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.