கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 2 கோடியே 65 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் எழுத்தா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில், நகை அடகு வைக்கப்பட்டு பணம் வழங்கப்பட்டது தொடா்பாக அதிகாரிகள் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் போலி தங்க நகைகள் அடகுவைத்து அதன் மூலம் சுமாா் ரூ. 2 கோடியே 65 லட்சம் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளா் முருகேசன், நாகா்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸீல் புகாா் அளித்தாா். அதன்பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளா் பா்ணபாஸ், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், வங்கியின் செயலாளா் கோட்டாறு, சவேரியாா் கோயில் தெருவைச் சோ்ந்த சகாய திலக்ராஜ், எழுத்தா் முத்துகிருஷ்ணன், பணியாளா்கள், உறுப்பினா்கள் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், எழுத்தா் முத்துகிருஷ்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சகாய திலக்ராஜ் உள்பட 6 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.63.39 லட்சம் மோசடி: 8 போ் கைது

அடகு வைத்த நகையை விற்று மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

பெண்ணிடம் நகை மோசடி: இளைஞா் மீது வழக்கு
ரூ.16 லட்சம் மோசடி: மூவா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



