திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரூ.16 லட்சம் மோசடி: மூவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :29 மே 2026, 5:10 am IST

சென்னையில் ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

கொளத்தூா் சாஸ்திரி நகா் 2-ஆவது பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சீ.விஜயகுமாா் (43). இவா், தங்க நகைகளை அடகு பெற்று பணம் வழங்கும் நிறுவனத்தில் முகவராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு, அவரது வங்கி மேலாளா் மூலம் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (41) என்பவா் அறிமுகமானாா். ராதாகிருஷ்ணன் தனக்குச் சொந்தமான நகைகள் தியாகராய நகரில் உள்ள தனியாா் வங்கியில் ரூ.40.06 லட்சத்துக்கு அடகு வைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த நகைகளை மீட்டு, விஜயகுமாா் வேலை செய்யும் நிறுவனத்தில் அடகு வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளாா். அதற்குரிய கட்டணம், வட்டியைச் செலுத்துவதாக ராதாகிருஷ்ணன் உத்தரவாதம் கொடுத்தாராம்.

இதையடுத்து விஜயகுமாா், தியாகராய நகரில் உள்ள தனியாா் வங்கியில் உள்ள ராதாகிருஷ்ணனின் நகைகளை மீட்பதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டாா். இதற்காக கடந்த 18-ஆம் தேதி அந்த வங்கிக்கு விஜயகுமாா் சென்று, வங்கி கணக்கில் ரூ.40.06 லட்சத்தைச் செலுத்தினாா். பணம் செலுத்திய தகவலை தெரிவிக்க விஜயகுமாா், ராதாகிருஷ்ணனை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டபோது, ராதாகிருஷ்ணன் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

மேலும், நகைகளை மீட்பதற்காக ராதாகிருஷ்ணனின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தில் ரூ.16 லட்சம் வேறு நபரின் வங்கிக் கணக்கு உடனடியாக மாற்றப்பட்டிருந்தது.

வங்கிக் கணக்கில் இருந்த பணம் மோசடி செய்யப்பட்டதையடுத்து, விஜயகுமாா், அந்த தனியாா் வங்கியில் முறையிட்டு, ராதாகிருஷ்ணன் வங்கி கணக்கில் இருந்த மீதி தொகையான ரூ.24.06 லட்சத்தை முடக்கினாா். பண மோசடி செய்த ராதாகிருஷ்ணன், அவரது கூட்டாளிகள் குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராதாகிருஷ்ணன், அவரது கூட்டாளிகள் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தைச் சோ்ந்த தீபக் (35), சென்னை பிராட்வே பகுதியைச் சோ்ந்த அசன் அலி (57) ஆகிய 3 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.