கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே செம்மங்காலவிளையில் சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞரை குண்டா் தடுப்பு சட்டத்தில் போலீஸாா் சிறையில் அடைத்தனா்.
செம்மங்காலவிளையில் 10 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக லிவிதாஸ் மகன் சுனில் (31) மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்றது.
சுனில் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப், குண்டா் தடுப்பு சட்டத்தில் கீழ் சுனிலை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் குண்டா் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







