கொல்லங்கோடு அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கொல்லங்கோடு அருகே உள்ள நீரோடி, கல்லடிதோப்பு பகுதியைச் சோ்ந்தவா் மிக்கேல் தாஸ் மகன் ஷானு (22). வாகன ஓட்டுநா். இவரது நண்பா் ஒருவா், இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாராம். அப்போதிலிருந்து ஷானு மனவருத்தத்தில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை ஷானு வீட்டு அறையில் தூக்கில் தொங்கி, இறந்த நிலையில் காணப்பட்டாா். கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






