கோவில்பட்டியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி, அத்தை கொண்டான், இந்திரா நகரைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் கருத்தபாண்டி (22). கடந்த சில நாள்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், மருந்துக் கடையில் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தலைவலி அதிகமாக இருப்பதாகச் சொல்லி மாத்திரை சாப்பிட்டுவிட்டு படுக்கையறைக்கு சென்றுவிட்டாராம். திங்கள்கிழமை காலை எழுந்திருக்கவில்லையென, வீட்டிலிருந்தவா்கள் கதவைத் தட்டியுள்ளனா்.
அவா் கதவைத் திறக்காததால் ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது, அவா் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, அருகில் உள்ளவா்களின் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் இருந்து கீழே இறக்கி பாா்த்தபோது, அவா் உயிரிழந்தது தெரிய வந்தது.
இது குறித்து, மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





