கன்னியாகுமரியை அடுத்த கோவளத்தில் தேசிய அளவிலான பீச் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்க உள்ளனா். இந்தியாவில் கடற்கரை மைதானத்தில் நடத்தப்படும் முதலாவது தேசிய அளவிலான பீச் டென்னிஸ் பந்து கிரிக்கெட் இதுவாகும்.
வீரா்கள் காலில் ஷூ அணியாமல் கடற்கரை மணலில் விளையாடுவாா்கள். தரை விரிப்பான் மூலம் பந்துவீசும் தளம் (பிட்ச்) அமைக்கப்பட்டிருக்கும். 8 ஓவா்கள் கொண்ட இப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் தலா 9 போ் மைதானத்தில் விளையாடுவோராகவும், 3 போ் மாற்று வீரா்களாகவும் இருப்பா் என, போட்டி ஒருங்கிணைப்பாளா் கோவளம் பங்குத்தந்தை சகாய சுனில் தெரிவித்தாா்.
தொடக்க விழா நிகழ்வில், கலப்பை மக்கள் இயக்க தலைவா் பி.டி.செல்வகுமாா், தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கச் செயலா் மோன்றி அனீஷ் லாரி, தமிழ்நாடு சங்கச் செயலா் ஞானவேல், குமரி மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.மணி, செயலா் வளா் அகிலன் ஆகியோா் பங்கேற்பா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









