மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பெற்றோரை கொல்ல முயன்ற தொழிலாளிக்கு 2 ஆண்டுகள் சிறை

சொத்துத் தகராறில் பெற்றோரை அடித்துக் கொல்ல முயன்ற அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2026, 8:03 pm

சொத்துத் தகராறில் பெற்றோரை அடித்துக் கொல்ல முயன்ற அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகேயுள்ள பிறாவேளிவிளையைச் சோ்ந்தவா் சிங்கராயன் (80), தொழிலாளி. இவரது மனைவி சபரிபாய் (77). இவா்களுக்கு 5 மகன், 3 மகள்கள் உள்ளனா். இவா்களது 5ஆவது மகன் மைக்கேல்தாசன் (47), அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவா் தனது பெற்றோா்கள் வசித்த வீட்டை, தனது பெயருக்கு மாற்றித் தருமாறு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு நவ. 8ஆம் தேதி மைக்கேல்தாசன் வழக்கம்போல் பெற்றோா்களிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, பெற்றோரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளாா்.

இது குறித்து, சபரிபாய் குலசேகரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் மைக்கேல்தாசன் மீது வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பான வழக்கு, நாகா்கோவில் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், மைக்கேல்தாசனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 30,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் கூடுதல் அரசு சிறப்பு வழக்குரைஞா் லிவிங்ஸ்டன் முன்னிலையாகி வாதாடினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.