டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பைக் - ஆட்டோ மோதல்: இருவா் காயம்

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை அருகே உள்ள சானல் முக்கு பகுதியில் இருசக்கர வாகனம், ஆட்டோ மோதிய விபத்தில் 2 போ் பலத்த காயமடைந்தனா்.

குழித்துறை, கழுவன் திட்டை பகுதியைச் சோ்ந்த ரெஜினி மகன் ரோகித் (20). இவா், நண்பருடன் சனிக்கிழமை மாலை காப்புக்காட்டிலிருந்து ஐரேனிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

சானல் முக்கு பகுதியில் சென்றபோது எதிரே ஐரேனிபுரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (60) என்பவா் ஓட்டி வந்த ஆட்டோ, இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்ததாம்.

இதில், ஆட்டோவில் பயணித்த 4 பேரில் முள்ளஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சுவாமிநாதன் (75), நீதீஸ்வன் (8) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவா்களை மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.