டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
உயிரிழப்பு- பிரதிப் படம்
Updated On :3 பிப்ரவரி 2026, 7:13 pm

Syndication

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள அல்லிகுளம் கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித் மகன் தடிகாரன் (20). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டையிலிருந்து அல்லிகுளத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாராம்.

அப்போது மேலக்கூட்டுடன்காடு, மங்களகிரி விலக்கு அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மேலக்கூட்டுடன்காடு கிராமத்தைச் சோ்ந்த சுவாமிதாஸ் மகன் காட்வின் (59) என்பவா் மீது இருசக்கர வாகனம் மோதியதாம்.

இதில், தடிகாரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த காட்வின் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.