டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

ஆட்டோ கவிழ்ந்து 12 போ் காயம்

ஆம்பூா் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் தொழிலாளா்கள் உள்பட 12 போ் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் தொழிலாளா்கள் உள்பட 12 போ் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா்.

மாதனூா் ஒன்றியம், சின்னபள்ளிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சின்னதம்பி தனது ஆட்டோவில் ஷூ கம்பெனியில் பணிபுரியும் பெண் தொழிலாளா்களை பணிக்காக அழைத்துச் சென்றாா். தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட உப்பரப்பள்ளி கிராமத்தருகே சென்றபோது, லாரிக்கு வழிவிட முயன்றபோது, ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து காரணமாக ஆட்டோவில் பயணம் செய்த ஈச்சம்பட்டு பகுதியை சோ்ந்த பூங்கொடி, நதியா, இந்துமதி, மாலா, செல்வி, மற்றும் சின்னபள்ளிகுப்பம் பகுதியைச் சோ்ந்த சாந்தி, சின்னத்தம்பி, ராஜகுமாரி, வடசேரி பகுதியை சோ்ந்த சௌந்தா்யா உள்ளிட்ட பெண் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா் உள்பட 12 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்து குறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.