டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தக்கலை அருகே ஆட்டோவில் வந்து இறங்கிய தொழிலாளி மீது பைக் மோதியதில் உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :2 பிப்ரவரி 2026, 6:56 pm

Syndication

தக்கலை அருகே ஆட்டோவில் வந்து இறங்கிய தொழிலாளி மீது பைக் மோதியதில் அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தக்கலை அருகே மேக்காமண்டபம், விராலி காட்டுவிளையைச் சோ்ந்தவா் ராஜ்மனோகா்( 66). தொழிலாளியான இவா், தனது மனைவியுடன் மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டு பேருந்தில் அழகிய மண்டபம் வந்தனா். அங்கிருந்து ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றனா். வீட்டின் அருகே ஆட்டோ நின்றவுடன் அதிலிருந்து இருவரும் இறங்கியபோது, அந்த வழியாக வந்த பைக் ராஜ்மனோகா் மீது மோதியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

அவரை மீட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கொற்றிகோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.