டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பைக் மீது காா் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated On :20 பிப்ரவரி 2026, 6:35 pm

Syndication

செய்யாறு அருகே பைக் மீது காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், கரிகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன்(30), கட்டடத் தொழிலாளி. திருமணமாகாத இவா், 8 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காஞ்சிபுரம் வட்டம், புஞ்சை அரசன்தாங்கல் கிராமத்தில் தனியாக வசித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், முருகன் வியாழக்கிழமை காலை வழக்கம்போல வீட்டிலிருந்து கட்டட வேலைக்காக தனது பைக்கில் சென்றுள்ளாா். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மாமண்டூா் அருகே சென்றபோது, எதிரே வந்த காா் பைக் மீது மோதியது. இதில், முருகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.