டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே பைக் மீது காா் மோதியதில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

மாா்த்தாண்டம் அருகே பைக் மீது காா் மோதியதில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

அருமனை அருகே மாத்தூா்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா்சிங் (50). ரப்பா் பால் வடிக்கும் தொழிலாளி. இவா் செவ்வாய்க்கிழமை இரவு மாா்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பாா்த்து விட்டு, பைக்கில் திரும்பி வந்தபோது, அப்பகுதி வழியாக வந்த காா், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதில், பலத்த காயமடைந்த சுந்தா்சிங்கை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.