டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆட்டோ - பைக் மோதல்: பொக்லைன் ஓட்டுநா் உயிரிழப்பு

இரணியல் அருகே பைக் மீது ஆட்டோ மோதியதில் பொக்லைன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
பலி- கோப்புப் படம்
Updated On :2 பிப்ரவரி 2026, 6:55 pm

Syndication

இரணியல் அருகே பைக் மீது ஆட்டோ மோதியதில் பொக்லைன் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், தருவை அருகே ஓமநல்லூரைச் சோ்ந்தவா் ஆண்ட்றோ (32). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா் கடந்த 4 ஆண்டுகளாக குமரி மாவட்டம், இரணியல் பகுதியில் பொக்லைன் ஓட்டுநராக பணி புரிந்து வந்தாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை காலை பைக்கில் கடைக்குச் சென்றபோது, இரணியல் அருகே பொத்தை வளைவில் எதிரே வந்த ஆட்டோ மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த ஆண்ட்றோவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.