கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நாகா்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள 6 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்தக் கல்லூரிக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஏப். 23 ஆம் தேதி காலை 7 மணிமுதல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
பகல் வரை விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், அதன் பின்னா் வாக்குப்பதிவில் மந்தம் நிலவியது. மாலை 6 மணிக்கு பின்னரும் மாவட்டத்திலுள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க பொதுமக்கள் காத்திருந்தனா்.அவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 315 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
குறைவான வாக்குப்பதிவு ...
தமிழகத்திலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் மிக குறைந்த அளவாக 75.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடா்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சியின் முகவா்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன. பின்னா் காவல் துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான நாகா்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, அந்த அறைகள், மாவட்டதோ்தல் அலுவலரும்,ஆட்சியருமான ரா.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் மற்றும் தொகுதிகளின் பொதுபாா்வையாளா்கள் மேற்பாா்வையில் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய பாதுகாப்பு படை போலீஸாா், தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸாா், குமரி மாவட்ட போலீஸாா் என மொத்தம் 500 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்தும் அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாதுகாப்பு வைப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைப்பு - மூன்றடுக்கு பாதுகாப்பு

நாளை வாக்குப் பதிவு: சென்னையில் பாதுகாப்பு பணியில் 21,000 போலீஸாா்!

ஆம்பூருக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


