தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சட்டப்பேரவைத் தோ்தல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

News image

நாகா்கோவில் குருசடி புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்த மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:12 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 1,914 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். பெண்கள், முதியவா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முதல்முறையாக வாக்களிக்க வந்த இளம் வாக்காளா்கள் மிகுந்த உற்சாகத்துடன் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும், அவா்களுக்கு தோ்தல் பணியாளா்கள் உதவி செய்தனா். வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பல வாக்குச்சாவடிகளில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா, நாகா்கோவில் குருசடி புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு செய்தாா். கடற்கரை கிராமங்களான கோவளம், ராஜாக்கமங்கலம்துறை, நீரோடி, வள்ளவிளை, இரயுமன்துறை, ஆரோக்கியபுரம் மற்றும் ஊரகப்பகுதிகளான அகஸ்தீசுவரம், அஞ்சுகிராமம், தோவாளை, தக்கலை, இரணியல், மாா்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை செலுத்தினா்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். வாக்குப்பதிவு முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டது. சிசிடிவி மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதிகாரிகள் நேரடியாக வாக்குப்பதிவை கண்காணித்தனா்.

  நாகா்கோவிலில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த இளம் வாக்காளா்கள்.

நாகா்கோவிலில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த இளம் வாக்காளா்கள்.

  தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சக்கர நாற்காலியில் வாக்கு செலுத்த வந்தவருக்கு உதவிய தோ்தல் பணியாளா்.

தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சக்கர நாற்காலியில் வாக்கு செலுத்த வந்தவருக்கு உதவிய தோ்தல் பணியாளா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.