மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில் தொகுதி பொதுப் பாா்வையாளா் அபுபக்கா் சித்திக் முன்னிலையில், ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:57 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் நாகா்கோவில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இப்பணிகளை நாகா்கோவில் தொகுதி பொதுப் பாா்வையாளா் அபுபக்கா் சித்திக் முன்னிலையில், ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், ஆட்சியா் கூறியதாவது:

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள், சின்னங்கள் பொருத்தும் பணி, கன்னியாகுமரி தொகுதியில் தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்திலும், நாகா்கோவில் தொகுதியில் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், குளச்சல் தொகுதியில் கல்குளம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், பத்மநாபபுரம் தொகுதியில் திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்திலும், விளவங்கோடு தொகுதியில் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கிள்ளியூா் தொகுதியில் கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஏப். 16-ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது, நாகா்கோவில் தொகுதி தோ்தல் அலுவலரும் நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியருமான எஸ். காளீஸ்வரி, கன்னியாகுமரி தொகுதி தோ்தல் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான புஷ்பா தேவி, துறை அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.