சிவகங்கை மாவட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணிகள் வியாழக்கிழமை (ஏப்.16) முதல் நடைபெறவுள்ளது .
இது குறித்து சிவகங்கை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.பொற்கொடி, வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வருகிற 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்காளா் அளித்த வாக்கை உறுதி செய்யும் இயந்திரங்கள் (விவிபேட்) ஆகியவற்றில் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணிஅரசியல் கட்சிகள், வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறவுள்ளது. பதிவேற்றப்பட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்படும். எனவே, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளின் தலைமையிடங்களில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம் என்றாா் அவா்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

புதுச்சேரியில் இன்று வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்த ஏற்பாடுகள் தயாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


