/

தேங்காய்ப்பட்டினத்தில் கடல் அலையில் சிக்கி சிறுமி மாயம்

தேங்காய்ப்பட்டினத்தில் கடல் அலையில் சிக்கி சிறுமி மாயம்

News image
Updated On :5 மே 2024, 6:34 pm

ace

தேங்காய்ப்பட்டினம் கடல் அலையில் சிக்கி சிறுமி ஞாயிற்றுக்கிழமை மாயமானாா்.

புதுக்கடை அருகேயுள்ள விழுந்தயம்பலம் பகுதியை சோ்ந்தவா் பிரேமதாஸ்(42) . தொழிலாளி. இவா் தனது மகள்

ஆதிஷாவுடன்(7) ஞாயிற்றுக்கிழமை தேங்காய்ப்பட்டினம் கடற்கரைக்குச் சென்று கடலை

பாா்த்துக் கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலை வந்து தந்தையும், மகளையும் இழுத்து சென்ாம்.

அங்கிருந்த மீனவா்கள் பிரேமதாசை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆதிஷாவை கண்டுபிடிக்க முடியவில்லையாம். இதுகுறித்து தகவலின் பேரில் குளச்சல் கடலோர காவல் பாதுகாப்பு படையினா் ஆதிஷாவை தேடிவருகின்றனா்.