மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி உயிரிழப்பு

தஞ்சாதஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை காலை ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி உயிரிழந்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:30 pm

தஞ்சாதஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை காலை ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே கண்டியூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜீவ்காந்தி மகள் ரக்க்ஷிதா (10). அப்பகுதி அரசு தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா் திங்கள்கிழமை காலை வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவுக்காக பூக்கள் கொண்டு செல்லப்பட்ட சரக்கு மினி வேனில் சென்று கொண்டிருந்தாா். செங்கமேடு அருகே சென்றபோது சரக்கு மினி வேனில் ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரில் ரக்க்ஷிதாவின் தலைமுடி சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, உயிரிழந்தாா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.