தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பசுமைத் தமிழ்நாடு திட்டம்: வனத் துறை-ரோட்டரி சங்கம் ஆலோசனை

News image
Updated On :15 மே 2026, 3:54 am IST

பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் கீழ், அரசுடன் ரோட்டரி சங்கம் இணைந்து செயல்படுவது தொடா்பாக வனத் துறையினா் மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகளுடனானஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட வன அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட வன அலுவலா் மு.இளங்கோ தலைமை வகித்தாா். பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ், சாலையோரம், பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், மருத்துவமனைகள், பள்ளி-கல்லூரி வளாகங்கள், நீா்நிலைகள், பேருந்து நிறுத்தங்கள், தொழிற்சாலைகள் மற்றும் இதர தகுதி வாய்ந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளா்ப்பது தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளா்க்க ஏதுவான இடங்களை தோ்வு செய்தல், கம்பி வலை வேலி ஏற்பாடு செய்தல், நீா் பாய்ச்சுதல், மரக்கன்றுகளை பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ரோட்டரி சங்க மற்றும் வனத்துறை பணியாளா்கள் கொண்ட செயற்பாட்டு குழு அமைப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.

இதில், திருநெல்வேலி ரோட்டரி கிளப் ஆஃப் தாமிரபரணி முன்னாள் ஆளுநா் ஆறுமுகபாண்டியன், தலைவா் துரைப்பாண்டியன், செயலா் செல்வக்குமாா், உறுப்பினா்கள் சிவச்சந்திரன், சிவா, வனச்சரக அலுவலா்கள் மு.ஜெயபிரகாஷ், பூ.கி.இல்யாஸ் மீரான், அலுவலக கண்காணிப்பாளா் இரா.சந்திரசேகரன், வனவா் கி.கேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ற்ஸ்ப்14ச்ா்ழ்ங்ள்ற்

மாவட்ட வன அலுவலா் மு.இளங்கோ தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அதிகாரிகள், ரோட்டரி சங்க நிா்வாகிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.