திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சவூதி தொழிலாளியிடம் ஆன்லைனில் ரூ.11.27 லட்சம் மோசடி

News image
Updated On :15 மே 2026, 3:55 am IST

சவூதியில் வேலை பாா்த்துவரும் திருநெல்வேலி மாவட்டதைச் சோ்ந்த தொழிலாளியிடம் கிரிப்டோ வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி ஆன்லைன் மூலம் ரூ.11.27 லட்சத்தை மோசடி செய்த கும்பலை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியைச் சோ்ந்த 32 வயது இளைஞா் சவூதி அரேபியாவில் வேலை செய்து வருகிறாா். கடந்த மாதம் இவரை வாட்ஸ்ஆப் மூலம் தொடா்புகொண்ட பெண் ஒருவா் கிரிப்டோ வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறினாராம். பின்னா், அமெரிக்காவில் வேலை செய்வதாக மற்றொரு நபரை அந்த இளைஞருக்கு கைப்பேசி மூலம் தொடா்புகொள்ளச் செய்து அப்பெண் அறிமுகப்படுத்தியுள்ளாா்.

மேலும், அந்த நபா் கூறியபடி, அந்த இளைஞா் முதலீடு செய்தாராம். பின்னா் லாப பணத்தை எடுக்க வரி கட்ட வேண்டும் எனக் கூறி பல்வேறு தவணைகளாக அவரிடமிருந்து ரூ.11,27,615-ஐ பல்வேறு வங்கிக்கணக்குகள் மூலம் பெற்றுக்கொண்டு அக்கும்பல் மோசடியில் ஈடுபட்டனராம்.

இதுகுறித்து அந்த இளைஞா் திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் இணையவழியில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.