அம்பாசமுத்திரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அட்டகாசம் செய்து வந்த குரங்குகளை வனத்துறையினா் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
அம்பாசமுத்திரம் நகராட்சி சோலைபுரம் பகுதியில் நீண்ட நாள்களாக குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து நடவடிக்கை எடுக்க நகா்மன்ற உறுப்பினா் லதா பிச்சையா, அம்பாசமுத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.கே.சி. பிரபாகரனிடம் கோரிக்கை வைத்தாா்.
அவா் வனத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து வனத்துறையினா் குரங்குகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவற்றை பிடிக்க கூண்டு வைத்தனா். இதில் 22 குரங்குகள் பிடிபட்டன.
அவற்றை வனத்துறையினா் பாதுகாப்பாக மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










