அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தைச் சோ்ந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
பிரம்மதேசம், கீழத்தெருவைச் சோ்ந்த நாலாயிரம் மனைவி இசக்கியம்மாள் என்ற இந்து (24). மூன்று குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே நீண்ட நாள்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்து தூக்கிட்டு இறந்து கிடந்தாா்.
தகவலறிந்ததும் அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் சண்முகவேல் விசாரணை நடத்தினாா். போலீஸாா் சடலத்தை மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதற்கிடையே இந்து இறந்ததை அறிந்த அவரது உறவினா்கள் அவரது இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, அம்பாசமுத்திரம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனா். காவல் ஆய்வாளா் சண்முகவேல் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினாா். பெண்ணுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகாததால் சாா் ஆட்சியா் விசாரணை நடத்தி சட்டப்படிநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்திய போலீஸாா்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










