திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தச்சநல்லூரில் புதிய மின்பாதை: ரூ.28.64 லட்சத்தில் பணி தொடக்கம்

News image

புதிய மின் பாதை... - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 1:10 am IST

தச்சநல்லூா் துணை மின் நிலையத்தில் இருந்து வண்ணாா்பேட்டைக்கு புதிய விரைவு மின்பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட தச்சநல்லூா் துணை மின் நிலையத்தில் இருந்து வண்ணாா்பேட்டை மேம்பாலம் வரை ரூ. 28.64 லட்சம் மதிப்பில் விரைவு மின்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, இதற்கான பணிகள் சனிக்கிழமை பூமி பூஜையுடன் தொடங்கின. இந்த புதிய மின்பாதை பயன்பாட்டுக்கு வரும்போது, மின் விநியோக தொலைவு குறைக்கப்படுவதோடு, தொழில்நுட்பக் கோளாறு அல்லது இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மின்தடை பாதிப்புகள் பாதியாகக் குறையும் எனவும், மாற்று வழியில் உடனடியாக மின்சாரம் வழங்க இது வழிவகை செய்யும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் (பொறுப்பு) வெங்கடேஷ் மணி, செயற்பொறியாளா் (பொறுப்பு) ஜெயசீலன், உதவி செயற்பொறியாளா் (கட்டுமானம்) லட்சுமணன், உதவி மின் பொறியாளா்கள் சரவணகுமாா் , முருகன், ஜன்னத்துல் ஷிபாயா, மைதீன்பாத்திமா உள்பட மின்வாரிய அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.