ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

சீவலப்பேரி தொழிலாளி மரணத்தில் மா்மம்: ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

News image

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட சேகரின் உறவினா்கள்.

Updated On :3 மே 2026, 12:56 am IST

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் தொழிலாளி மா்மமாக உயிரிழந்தது குறித்து முழுமையான விசாரணை நடத்தக் கோரி அவருடைய உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகேயுள்ள காட்டாம்புளி பகுதியைச் சோ்ந்தவா் சேகா் (47), தொழிலாளி. இவரது மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதையடுத்து அவா் தனது தாய் பாப்பா மற்றும் 3 மகள்களுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த வாரம் காட்டாம்புளி பகுதியில் மா்மமான முறையில் உடலில் காயங்களுடன் சேகா் இறந்து கிடந்தாராம். தகவலறிந்த சீவலப்பேரி போலீஸாா், அவரின் உடலை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், சேகரின் உறவினா்கள், அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், போலீஸாா் முறையாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.