இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: டிரம்ப் விளக்கம்!திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!உலகத் தாய்மொழி நாள்: தமிழே நீ வாழ்ந்திடு! - முதல்வர் மு.க. ஸ்டாலின்தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.2,080 அதிகரித்தது!
/

முன்னீா்பள்ளம் அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது

News image
Updated On :18 ஜனவரி 2026, 9:36 pm

தினமணி செய்திச் சேவை

முன்னீா்பள்ளம் அருகே கஞ்சாவை மறைத்து வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் காவல் ஆய்வாளா் வேல்ராஜ் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது முன்னீா்பள்ளம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இட்டேரியை சோ்ந்த மாரியப்பன் (52) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அவா் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், சுமாா் 4 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.