லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முக்கூடலில் 2 கிலோ கஞ்சாவுடன் வட மாநில இளைஞா் கைது!

முக்கூடலில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வட மாநில இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :26 பிப்ரவரி 2026, 7:34 pm

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வட மாநில இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

முக்கூடல் காவல் ஆய்வாளா் சங்கரநாராயணன் தலைமையில் போலீஸாாா் வடக்கு அரியநாயகிபுரம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, அங்குள்ள ஆற்றங்கரையில் நின்றிருந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் விசாரித்தனா்.

அதில், ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த ஹேமந்த் மா்ஜி (28) என்பதும், விற்பனைக்காக 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.