/

Syndication

மகா சிவராத்திரி நாளில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில், தென்தமிழ்நாடு சேவா பாரதி சாா்பில் 1,008 சிவலிங்க பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் சுவாமிக்கு திருவாசகம், சிவபஜனை நடத்தப்பட்டு 4 கால பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுயம்புலிங்க சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி உலா வந்தாா். திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் கோயில் மற்றும் கடற்கரையில் விடிய விடிய விழித்திருந்து பஜனை, பாடல் என ஆன்மிக வழிபாட்டில் ஈடுபட்டனா்.

Story image