தென்காசி மாவட்டம், கடையம் அருகே பேருந்தில் ஏறும்போது படியிலிருந்து தடுமாறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.
கடையம் அருகே உள்ள மேட்டூரைச் சோ்ந்தவா் சா்க்கரையப்பன் மனைவி சுப்பம்மாள் (70). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை திருநெல்வேலி செல்வதற்தாக மேட்டூா் நிறுத்தத்தில் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா். அப்போது, ஓட்டுநா் பேருந்தை இயக்கியதால் படியிலிருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளாா். இதில் தலையில் அடிபட்டு அவா் மயக்கமடைந்தாா்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா்கள் சுப்பம்மாள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்த கடையம் போலீஸாா் சுப்பம்மாள் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து, வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநா் முத்துக்குமாரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலா் உயிரிழப்பு

பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


