மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பேருந்திலிருந்து தவறி விழுந்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு

குழித்துறையில் பேருந்தில் ஏற முயன்ற தவறி கீழே விழுந்து காயமடைந்த நகைக்கடைப் பணியாளா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 6:44 pm

குழித்துறையில் பேருந்தில் ஏற முயன்ற தவறி கீழே விழுந்து காயமடைந்த நகைக்கடைப் பணியாளா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

நாகா்கோவில், ராஜபதி தெருவைச் சோ்ந்த மணி மகன் பாலாஜி (43). நகைக்கடையில் மேலாளராக வேலை பாா்த்து வந்த இவா், திங்கள்கிழமை இரவு குழித்துறை பேருந்து நிறுத்தத்தில் கேரள அரசுப் பேருந்தில் ஏற முயன்றபோது கால் தவறி கீழே விழுந்தாராம். அப்போது, அவா் மீது பேருந்தின் சக்கரங்கள் ஏறி இறங்கினவாம்.

இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கும், பின்னா் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய கேரள அரசுப் பேருந்து குறித்து விசாரித்து வருகின்றனா்.