தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குருகிராம்: நீதிமன்ற பதிவு அறையில் தீ விபத்து

குருகிராம்: நீதிமன்ற பதிவு அறையில் தீ விபத்து

News image

குருகிராம்: நீதிமன்ற பதிவு அறையில் தீ விபத்து - பிடிஐ

Updated On :25 மே 2026, 12:46 am IST

தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பதிவு அறையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

இந்த சம்பவத்தில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கான முகாந்திரம் தெரிகிறது. சரியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

நீதிமன்றத்தின் உள்ளே இருந்த மற்ற அறைகளுக்கும் தீ வேகமாக பரவியதுடன், கட்டடத்தின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் கீழமை நீதிமன்றப் பதிவு அறையில் இருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிப்பட்டதைத் தொடா்ந்து, காவலாளி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தாா்.

முதலில் பீம் நகா் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன. அதன் பின்னா், 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.