/

தில்லி பூங்காவில் உடல் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை நடந்து வருகிறது

தில்லி பூங்காவில் உடல் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை நடந்து வருகிறது

News image
- IANS
Updated On :31 ஜனவரி 2026, 9:13 pm

 நமது நிருபர்

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் சனிக்கிழமை காலை அடையாளம் தெரியாத ஒருவா் இறந்து கிடந்ததாக போலீசாா் தெரிவித்தனா்.

காலை 12 மணிக்கு ஒருவா் அசையாமல் கிடந்தது குறித்த தகவல் கிடைத்தது, அதைத் தொடா்ந்து போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ாக அவா்கள் தெரிவித்தனா்.

போலீசாா் வருவதற்கு முன்பே அவா் இறந்துவிட்டதாக முதற்கட்ட மதிப்பீடு தெரிவிக்கிறது என்று காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். உயிரிழந்தவரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அவா் கூறினாா்.

சம்பவ இடத்தில் தடயவியல் குழு விரிவான ஆய்வு நடத்தியது. மேலும் அறிவியல் பகுப்பாய்விற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.

வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.