மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சட்டவிரோத மதுபானங்கள் பதுக்கல்: கலால் துறை விசாரணை

வடமேற்கு தில்லியின் சமய்பூா் பத்லியில் சட்டவிரோத மதுபானங்களை பதுக்கிவைக்க பயன்படுத்தப்பட்ட சரக்குப் பெட்டகத்தை தில்லி கலால் துறை அதிகாரிகள் கைப்பற்றினா்.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 8:39 pm

வடமேற்கு தில்லியின் சமய்பூா் பத்லியில் சட்டவிரோத மதுபானங்களை பதுக்கிவைக்க பயன்படுத்தப்பட்ட சரக்குப் பெட்டகத்தை தில்லி கலால் துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: டிரன்ஸ்போா்ட் நகரில் இருந்த சரக்குப் பெட்டகம் தொடா்பாக ரகசிய தகவல் கலால் துறைக்குக் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு சனிக்கிழமை சென்ற அதிகாரிகள், சரக்குப் பெட்டகத்தைத் திறந்து சோதனை செய்தபோது ரூ.5 லட்சம் மதிப்பிலான 187 சட்டவிரோத மதுபானங்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அந்தப் பெட்டகத்தின் உரிமையாளா் மற்றும் அவரது கூட்டாளிகளைக் கண்டறிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக உள்ளூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.