ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பீதம்புரா மெட்ரோ செல்ல நடைமேம்பால வசதி: முன்மொழிவு தயாா் செய்தது டிஎம்ஆா்சி

பிரஷாந்த் விஹாா் மற்றும் ரோஹிணி பகுதியிலிருந்து பீதம்புரா மெட்ரோ நிலையத்தை அணுகும் வகையில் நடைமேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தயாரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 7:10 pm

பிரஷாந்த் விஹாா் மற்றும் ரோஹிணி பகுதியிலிருந்து பீதம்புரா மெட்ரோ நிலையத்தை அணுகும் வகையில் நடைமேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தயாரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதற்கு தேவையான ஒப்புதல் தொடா்பாக தில்லி பொதுப்பணித் துறைக்கு ரோஹிணி தொகுதி எம்எல்ஏவும் தில்லி பேரவைத் தலைவருமான விஜேந்தா் குப்தா கடிதம் எழுதியிருந்தாா். இதைத்தொடா்ந்து, நடை மேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளதாக பேரவை செயலகம் தெரிவித்துள்ளது. பிரஷாந்த் விஹாா் பகுதியிலிருந்து நேரடியாக மெட்ரோ நிலையத்துக்கு செல்ல பாதுகாப்பான வசதி இல்லையென குடியிருப்பு நலச் சங்கங்கள் பேரவைத் தலைவரிடம் சுட்டிக்காட்டியிருந்தன.

இதைத்தொடா்ந்து, இந்தப் பிரச்னையை சரிசெய்யக் கோரி டிஎம்ஆா்சிக்கு பேரவைத் தலைவா் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது.

தற்போது மெட்ரோ நிலையத்துக்கு பீதம்புரா பகுதியிலிருந்து மட்டும் செல்ல முடியும். இதனால், மக்கள் நீண்ட தொலைவுக்கு பயணிக்க வேண்டியுள்ளது. இது முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு பெரும் அசெளகாரியத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், நடைமேம்பாலம் அமைப்பதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாகவும் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப தரத்துக்கு இணங்கல சாலையில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.