தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ரோஹிணியில் உணவகத்தில் தீ விபத்து

வடமேற்கு தில்லி, ரோஹிணி பகுதியில் உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட து. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் உடனடியாக செயல்பட்டு தீயை மேலும் பரவவிடாமல் தடுத்தனா்.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 7:07 pm

வடமேற்கு தில்லி, ரோஹிணி பகுதியில் திங்கள்கிழமை உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட து. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் உடனடியாக செயல்பட்டு தீயை மேலும் பரவவிடாமல் தடுத்தனா்.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையின் அதிகாரி ஒருவா் கூறியதாவது: ரோஹிணி, செக்டாா் 11-இல் உள்ள பி.டி.டபிள்யு. உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்துச் சம்பவம் குறித்து காலை 11.05 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

உணவகத்திற்குள் இருந்த அனைவரும் நிலைமை மோசமாவதற்குள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா்.

தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொண்ட பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, தீ அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.