வடமேற்கு தில்லி, ரோஹிணி பகுதியில் திங்கள்கிழமை உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட து. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் உடனடியாக செயல்பட்டு தீயை மேலும் பரவவிடாமல் தடுத்தனா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையின் அதிகாரி ஒருவா் கூறியதாவது: ரோஹிணி, செக்டாா் 11-இல் உள்ள பி.டி.டபிள்யு. உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்துச் சம்பவம் குறித்து காலை 11.05 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
உணவகத்திற்குள் இருந்த அனைவரும் நிலைமை மோசமாவதற்குள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா்.
தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்க முயற்சிகள் மேற்கொண்ட பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, தீ அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

கட்டுமான பணியின்போது விபத்து: 3 தொழிலாளா்கள் காயம்

காமநாயக்கன்பட்டியில் தீ விபத்து

ஆடைகள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

வடமேற்கு தில்லியில் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

