மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காமநாயக்கன்பட்டியில் தீ விபத்து

News image

தீ விபத்து - கோப்புப்படம்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:34 pm

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள மெழுகுவா்த்தி விற்பனைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து நேரிட்டது.

அங்குள்ள பிரதான சாலையில் மரியமிக்கேல் மகன் இன்னாசிமுத்து என்பவா் மெழுகுவா்த்தி தயாரித்து விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். அதனுடன் ஜெராக்ஸ் மையமும் நடத்திவருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவா் கடையைப் பூட்டிவிட்டு சாப்பிடச் சென்றபோது, கடையிலிருந்து புகை வந்ததாம். இது தொடா்பாக அவருக்கும், தீயணைப்புத் துறை, கொப்பம்பட்டி போலீஸாருக்கும் அப்பகுதியினா் தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். எனினும், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.