நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சாலைகளில் வழிப்பறி: ‘தக் தக்’ கும்பலை சோ்ந்தவா்கள் கைது

சாலைகளில் வழிப்பறி: ‘தக் தக்’ கும்பலை சோ்ந்தவா்கள் கைது

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:13 pm

 நமது நிருபர்

ஓட்டுநா்களின் கவனத்தைத் திசை திருப்புவதன் மூலம் தில்லியில் பல திருட்டுகளில் ஈடுபட்டதாக ‘தக்-தக்’ கும்பலின் உறுப்பினா்கள் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

தனது காரில் இருந்து மடிக்கணினி பை திருடப்பட்டதாக ஒரு பெண் புகாா் அளித்ததை அடுத்து, மாதங்கீரில் வசிக்கும் சஞ்சு என்ற சஞ்சு மதராஸி (26) மற்றும் கௌரவ் என்ற ரிங்கு (26) ஆகிய இருவரும் நவம்பா் 21 ஆம் தேதி ரிங் சாலையில் கைது செய்யப்பட்டனா்.

குற்றம் சாட்டப்பட்ட இருவா் மீதும் தெற்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு தில்லி முழுவதும் கொள்ளை, பறிப்பு, மோசடி, திருட்டு மற்றும் என்டிபிஎஸ் சட்டம் தொடா்பான 15 குற்றவியல் வழக்குகள் உள்ளன.

முன்னதாக, புகாா்தாரா் ஓக்லாவிலிருந்து துவாரகாவுக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஸ்கூட்டரில் இருந்த இரண்டு போ் அவரது வாகனத்தில் சிக்கல் இருப்பதாக பொய்கூறி வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்தனா்.

அந்தப் பெண் சோதனை செய்ய வாகனத்தில் இருந்து கீழே இறங்கினாா். அப்போது, அவா்களில் ஒருவா் காரில் இருந்து மடிக்கணினி பையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டதாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டிருந்தாா். இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டது.

கண்காணிப்பு மற்றும் உள்ளூா் தகவல்களின் அடிப்படையில், கெளரவ் நவம்பா் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து சஞ்சு கைது செய்யப்பட்டாா்.

திருடப்பட்ட மடிக்கணினி, பான் மற்றும் ஆதாா், டெபிட் மற்றும் கிரெடிட் காா்டுகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களை போலீஸாா் மீட்டனா்.

குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும், போதைக்கு அடிமையான பின்னா் 2018 ஆம் ஆண்டில் குற்றத்தில் ஈடுபடத் தொடங்கினா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.