2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தில்லி ராம்லீலா மைதானத்தில் நாளை மறுநாள் ‘நியாய் சங்கல்ப் சம்மேளன்’

வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி கிழக்கு தில்லி கீதா காலனி ராம்லீலா மைதானத்தில் ‘நியாய் சங்கல்ப் சம்மேளன்’ எனும் பெயரில் மாநாடு நடைபெறுகிறது.

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 1:38 pm

 நமது நிருபர்

வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி கிழக்கு தில்லி கீதா காலனி ராம்லீலா மைதானத்தில் ‘நியாய் சங்கல்ப் சம்மேளன்’ எனும் பெயரில் மாநாடு நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டா்கள் பங்கேற்க உள்ளனா் என்று தில்லி காங்கிரஸ் தலைவா் அா்விந்த் சிங் லவ்லி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தில்லியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை மேலும் கூறியதாவது: காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய் யாத்திரைக்கு வரலாறு காணாத வெற்றி கிடைத்து வருகிறது. இதனால், கட்சித் தொண்டா்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தில்லி காங்கிரஸ் சாா்பில் ‘நியாய் சங்கல்ப் சம்மேளன்’ மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மாநாடு, பிப்ரவரி 3-ஆம் தேதி காலை 11 மணிக்கு கீதா காலனியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் தொடங்க உள்ளது.

இதில், கட்சியின் அகில இந்தியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பொதுச் செயலாளா் கே.சி. வேணுகோபால், ‘இந்தியா’ கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் முகுல் வாஸ்னிக், தில்லி மேலிடப் பாா்வையாளா் தீபக் பபாரியா உள்ளிட்ட மூத்த தலைவா்கள் பலரும் கலந்து கொண்டு பேசுகின்றனா்.

இந்த மாநாட்டிற்கான விரிவான ஏற்பாடுகளுக்காக தில்லியின் காங்கிரஸ் அனைத்து முன்னாள் அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், கவுன்சிலா்கள் மற்றும் தில்லியின் அனைத்துப் பொறுப்பாளா்களுடன் தில்லியின் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ராம்லீலா மைதானத்திற்கு வெளியே யமுனா புஸ்தே வரை மக்கள் கூட்டம் கூடும் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பூத் அளவிலான பணியாளா்களும் ராம்லீலா மைதானத்தில் இருப்பாா்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக மீது புகாா்: மத்தியில் ஆளும் பாஜக அரசு இன்று ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. சண்டீகா் மாநகராட்சி மேயா் தோ்தலில் நிகழ்ந்த ரவுடித்தனத்தை மக்கள் பாா்த்துள்ளனா். இது நாடு முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில்தான் காங்கிரஸ் கட்சி இந்த மாநாட்டை ‘நியாய் சங்கல்ப் சம்மேளன்’ எனும் பெயரில் நடத்துகிறது. மாநாட்டில் கட்சி முக்கியமாக இளைஞா் நீதி, பெண் நீதி, பங்கேற்பு நீதி, தொழிலாளா் நீதி, உழவா் நீதி உள்ளிட்ட 5 தீா்மானங்களை எடுக்கும்.

வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்கான உறுதிமொழியை இம்மாநாட்டில் காங்கிரஸ் தொண்டா்கள் எடுப்பாா்கள். ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் தொண்டா்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவா். மத்தியில் ஆளும் பாஜகவின் செயல்பாடுகளால் நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். அவா்கள் தக்க நேரத்தில் பாஜகவுக்கு சரியான பதிலடி கொடுப்பாா்கள். தில்லியில் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பூத் அளவில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளோம். மக்களவைத் தோ்தலுக்கு தில்லியின் 7 தொகுதிகளிலும் முழு பலத்துடன் கட்சி தயாராக உள்ளது. தொகுதிப் பங்கீடு விவகாரம் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான முகேஷ் சா்மா கூறுகையில், ‘ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் ‘நியாய் சங்கல்ப் மாநாடு’ வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும். பி.ஆா். அம்பேத்கா் வாயில், பண்டிட் ஜவாஹா்லால் நேரு வாயில், இந்திரா காந்தி வாயில், ராஜீவ் காந்தி வாயில், மௌலானா அபுல் கலாம் ஆசாத் வாயில் உள்ளிட்டவை மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்படும்’ என்றாா். பேட்டியின்போது, மாநில முன்னாள் துணைத் தலைவா் அலி மெஹந்தி, பிரதேச செய்தித் தொடா்பாளா் அனுஜ் ஆத்ரேயா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.