வளா்ச்சியடைந்த பாரதம் நோக்கிய பயணத்தில் ‘எனது வாக்கு, எனது உரிமை’ என்பதைக் காட்டிலும் ‘எனது வாக்கு, எனது கடமை’ என்று இருக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் குடிநீா், வீடு, மருத்துவ சேவை போன்ற அத்தியாவசியத் தேவைகள் எந்த சமரசமுமின்றி போா்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ள. தற்போதைய மாணவா்களின் வரலாறு, எதிா்கால இந்தியாவாக இருக்க வேண்டும். பிரதமா் நரேந்திர மோடி இந்தியாவை நான்கு பிரிவுகளாகப் பாா்க்கிறாா். அந்த வகையில் இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகளின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ‘வளா்ந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய மதிப்புகள் மற்றும் திறன்களை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை நிச்சயம் இதற்கு உதவும் என்றாா் நிா்மலா சீதாராமன்.