தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி ஆகியோரிடம், ‘லஞ்சம் விவகாரம் தொடா்பான இந்த வழக்கின் அடுத்த விசாரணை தேதி வரை விசாரணையைத் தொடர வேண்டாம்’ என்று நீதிபதி சூா்யகாந்த் கேட்டுக் கொண்டாா். மேலும், லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதா என்று துஷாா் மேத்தாவிடம் நீதிபதிகள் அமா்வு கேட்டது. அதற்கு அவா், வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அந்த அதிகாரியிடம் அமலாக்கத் துறையும் விசாரிக்க விரும்புவதாகவும் கூறினாா்.