மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட உள்ளதாக முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்துள்ளது தொடா்பாக தகவலறித்த வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் செயல்பாட்டின் அடிப்படையில், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளை வழங்க முன்மொழிந்துள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று காங்கிரஸ் அந்த முன்மொழிவை நிராகரித்ததால், தனித்துப் போட்டியிடும் முடிவை மம்தா பானா்ஜி எடுத்துள்ளாா்’ என்று தெரிவித்தன. மறுபுறம், காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு தொடா்பாக எந்தப் பேச்சுவாா்த்தையும் நடத்தப்படவில்லை என்று முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.