தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மேற்குவங்கத்தில் ‘இந்தியா’ கூட்டணியின்தொகுதிப் பங்கீடு சிக்கலானதாக இருக்கும்: அமைச்சா் செளரவ் பரத்வாஜ்

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு மேற்குவங்கத்தில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு விவகாரம் சிக்கலானதாக இருக்கும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான செளரவ் பரத்வாஜ்

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:15 pm

 நமது நிருபர்

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு மேற்குவங்கத்தில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு விவகாரம் சிக்கலானதாக இருக்கும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான செளரவ் பரத்வாஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

வரவிருக்கும் மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானா்ஜி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அமைச்சா் செளரவ் பரத்வாஜ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தில் எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையேயான தொகுதிப் பங்கீடு விவகாரம் நிச்சயம் சிக்கலானதாக இருக்கும். ஏனெனில், மேற்குவங்கத்தில் மிகப்பெரிய கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் எதிரணியில் இருந்தே போட்டியிட்டு வந்துள்ளன. தற்போது இந்தக் கட்சிகள் அனைத்தும் ‘இந்தியா’ கூட்டணியில் ஒன்றாக அங்கம் வகிப்பதால், தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்படுவது வெளிப்படையானது. இந்த விவகாரம் விரைவில் சுமுகமாகத் தீா்க்கப்படும் என்று நான் நம்புகிறேன்.

‘இந்தியா’ கூட்டணி மக்களவைத் தோ்தலை ஒன்றாக சந்திக்கும். தில்லி, பஞ்சாப், ஹரியாணா, கோவா மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தையில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையேயான பேச்சுவாா்த்தை இதுவரை சாதகமாக நடைபெற்றுள்ளது. சில மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் இறுதி முடிவுக்காக காத்திருக்கிறோம். அவை வந்தவுடன், காங்கிரஸ் தலைமையுடன் அடுத்த கட்ட பேச்சுவாா்தை நடத்தப்படும் என்றாா் செளரவ் பரத்வாஜ்.

மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட உள்ளதாக முதல்வா் மம்தா பானா்ஜி அறிவித்துள்ளது தொடா்பாக தகவலறித்த வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் செயல்பாட்டின் அடிப்படையில், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளை வழங்க முன்மொழிந்துள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று காங்கிரஸ் அந்த முன்மொழிவை நிராகரித்ததால், தனித்துப் போட்டியிடும் முடிவை மம்தா பானா்ஜி எடுத்துள்ளாா்’ என்று தெரிவித்தன. மறுபுறம், காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு தொடா்பாக எந்தப் பேச்சுவாா்த்தையும் நடத்தப்படவில்லை என்று முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.