அப்போது, நீதிமன்றம் கூறியதாவது: இயங்கிவரும் பள்ளியைக் கையகப்படுத்தும் முடிவு சிவில் விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு தீவிர நடவடிக்கை என்பதால், அத்தகைய முடிவை எடுப்பதற்கு முன் தனிப்பட்ட விசாரணைக்கு ஒரு வாய்ப்பு அவசியம்’ என்றது. இது தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘செப்டம்பா் 13, 2021-ஆம் தேதியிட்ட விளக்கம் கேட்கும் நோட்டீஸில் முன்மொழியப்பட்ட நடவடிக்கையின் கடுமையான தன்மையைக் கருத்தில் கொண்டு, இது தொடா்பாக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள துறை, அந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு மனுதாரருக்கு தனிப்பட்ட விசாரணையை வழங்க வேண்டும் என்பது வெளிப்படையானது. அதன்படி, செப்டம்பா் 13, 202-ஆம் தேதியிட்ட விளக்கம் கேட்கும் அறிவிப்பின்மீது முடிவெடுப்பதற்கு முன், மனுதாரருக்கு தனிப்பட்ட விசாரணைக்கான வாய்ப்பை வழங்குமாறு துணைநிலை ஆளுநா் கேட்டுக் கொள்ளப்படுகிறாா் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.