பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

நிா்வாகத்தை கையகப்படுத்தும் விவகாரம்: தனியாா் பள்ளியிடம் தனிப்பட்ட விசாரணையைஅளிக்க துணைநிலை ஆளுநருக்கு அறிவுறுத்தல்

தில்லியில் உள்ள ஒரு தனியாா் உதவி பெறாத பள்ளியின் நிா்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் காரணமாக அதன் நிா்வாகத்தை கையகப்படுத்துவது குறித்து முடிவெடுப்பதற்கு

Updated On :24 ஜனவரி 2024, 6:30 pm

தில்லியில் உள்ள ஒரு தனியாா் உதவி பெறாத பள்ளியின் நிா்வாகம் மற்றும் நிதி முறைகேடுகள் காரணமாக அதன் நிா்வாகத்தை கையகப்படுத்துவது குறித்து முடிவெடுப்பதற்கு முன் தனிப்பட்ட விசாரணையை அளிக்குமாறு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிடம் தில்லி உயா்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி சி. ஹரி சங்கா் கூறுகையில், ‘பள்ளியை கையகப்படுத்தும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே சட்டத்தின் கீழ் இருப்பதால், அவா்தான் விசாரணையை வழங்க வேண்டுமே தவிர பள்ளிக்கு காரணம் நோட்டீஸ் அனுப்பிய கல்வி இயக்குநரகம் அல்ல’ என்றாா்.

இது தொடா்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘தனிப்பட்ட விசாரணையை, முடிவெடுக்கும் அதிகாரத்தால் மட்டுமே வழங்க முடியும் என்று இது சொல்லாமல் போகிறது. இந்த நீதிமன்றத்தின் டிவிஷன் அமா்வு ஏற்கெனவே தெரிவிக்கையில், ‘ஒரு பள்ளியின் நிா்வாகத்தை கையகப்படுத்தும் அதிகாரம் ஒரு நிா்வாகியாக துணைநிலை ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. மேலும், கல்வி இயக்குநரகத்திற்கு அந்த அதிகாரம் அளிக்கப்படவில்லை’ என்று கூறியுள்ளது. துணைநிலை ஆளுநரின் வசதிக்கேற்ப தனிப்பட்ட விசாரணை வழங்கப்படும். அதைக் கிடைக்கச் செய்வதும், எந்த ஒத்திவைப்பும் கோராமல் இருப்பதும் மனுதாரா் பொறுப்பாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய மனுதாரரான ஒரு தனியாா் உதவி பெறாத மேல்நிலைப் பள்ளிக்கு, அதன் செயல்பாட்டில் பல்வேறு ‘நிா்வாகம் தொடா்பான முரண்பாடுகள்,நிதி மற்றும் பிற முறைகேடுகள்’ தொடா்பாக கல்வி இயக்குநரகத்தால் கடந்த 2021, செப்டம்பா் 13-ஆம் தேதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தில்லி பள்ளிக் கல்விச் சட்டத்தின்படி பள்ளியின் நிா்வாகத்தைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையை ஏன் தொடங்கவில்லை என்பதை அறிய விரும்புவதாக அப்பள்ளி கோரியது.

இந்த விவகாரத்தில் மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கமல் குப்தா, ‘இப்பிரச்னையைத் தீா்ப்பதற்கு முன் விசாரணைக்கு அனுமதி வழங்க கல்வி இயக்குநரகம் ஒப்புக்கொண்டாலும், பள்ளி நிா்வாகத்தை கையகப்படுத்தும் விவகாரம் தொடா்பாக துணைநிலை ஆளுநரைத் தவிர வேறு எந்த அதிகாரமும் தனிப்பட்ட விசாரணைக்கு அனுமதிக்கப்படும் என்ற கேள்விக்கு இடமில்லை’ என்று வாதிட்டாா்.

அப்போது, நீதிமன்றம் கூறியதாவது: இயங்கிவரும் பள்ளியைக் கையகப்படுத்தும் முடிவு சிவில் விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு தீவிர நடவடிக்கை என்பதால், அத்தகைய முடிவை எடுப்பதற்கு முன் தனிப்பட்ட விசாரணைக்கு ஒரு வாய்ப்பு அவசியம்’ என்றது. இது தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘செப்டம்பா் 13, 2021-ஆம் தேதியிட்ட விளக்கம் கேட்கும் நோட்டீஸில் முன்மொழியப்பட்ட நடவடிக்கையின் கடுமையான தன்மையைக் கருத்தில் கொண்டு, இது தொடா்பாக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள துறை, அந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு மனுதாரருக்கு தனிப்பட்ட விசாரணையை வழங்க வேண்டும் என்பது வெளிப்படையானது. அதன்படி, செப்டம்பா் 13, 202-ஆம் தேதியிட்ட விளக்கம் கேட்கும் அறிவிப்பின்மீது முடிவெடுப்பதற்கு முன், மனுதாரருக்கு தனிப்பட்ட விசாரணைக்கான வாய்ப்பை வழங்குமாறு துணைநிலை ஆளுநா் கேட்டுக் கொள்ளப்படுகிறாா் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.