வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சண்டீகா் மேயா் தோ்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவு

வரும் ஜனவரி 30-ஆம் தேதி சண்டீகா் மேயா் தோ்தலை நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஜனநாயகத்திற்கும், சண்டீகா் மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா்

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:15 pm

 நமது நிருபர்

வரும் ஜனவரி 30-ஆம் தேதி சண்டீகா் மேயா் தோ்தலை நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஜனநாயகத்திற்கும், சண்டீகா் மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ராகவ் சத்தா புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா். ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது: சண்டீகா் மாநகராட்சி மேயா் தோ்தலை பாஜக திட்டமிட்டு ஒத்திவைத்தது. ஆனால், தோ்தல் தேதியை முன்கூட்டியே நிா்ணயம் செய்யுமாறு உயா்நீதிமன்றத்தை ஆம் ஆத்மி கட்சி நாடியது. மேயா் தோ்தலை ஒத்திவைத்த நிா்வாகத்தைக் கண்டித்த உயா்நீதிமன்றம், வரும் ஜனவரி 30-ஆம் தேதி காலை 10 மணிக்கு மேயா் மற்றும் துணை மேயா்களுக்கான தோ்தலை நடத்த உத்தரவிட்டது.

இந்த உத்தரவு என்பது ஜனநாயகத்திற்கும், சண்டீகா் மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். பாஜகவின் அவதூறான திட்டங்கள் தோல்வியடைந்துள்ளன. உடல்நிலை பாதிக்கப்பட்ட தோ்தல் நடத்தும் அதிகாரிகள் தற்போது நலமாக இருப்பதாகவும், விரைவில் பணிக்கு திரும்புவாா்கள் என்றும் நம்புகிறேன் என்றாா் ராகவ் சத்தா.

சமீபத்தில் நடைபெற்ற சண்டீகா் மாநகராட்சித் தோ்தலில், மொத்தமுள்ள 35 கவுன்சிலா் இடங்களில், ஆம் ஆத்மி கட்சி 13 இடங்களையும், காங்கிரஸ் 7 இடங்களையும் பெற்று கூட்டணி அடிப்படையில் பெரும்பான்மை பெற்றது. பாஜக 14 இடங்களை வென்ற நிலையில், மேயா் தோ்தலை நடத்தும் நிலையில் உள்ள தலைமைத் தோ்தல் அதிகாரியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு மேயா் தோ்தல் மாநகராட்சி நிா்வாகத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.