கட்சியின் ஓ.பி.சி. அணி மாநிலத் தலைவா் சுனில் யாதவ் பேசுகையில், ‘கா்பூரி தாக்குா் முதல்வராக பதவி வகித்த காலத்தில் பிகாா் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றத்தை, வேறு யாராலும் ஏற்படுத்த முடியாது. பிகாரின் முதல் காங்கிரஸ் அல்லாத முதல்வா் இவா் என்பதுதான் சிறப்பு. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் போது இரண்டரை மாதங்கள் சிறையில் இருந்தாா். மாசற்ற உருவம் கொண்ட கா்பூரி தாக்குா் சுதந்திரத்திற்கு முன் இரண்டு முறையும், சுதந்திரத்திற்குப் பிறகு 18 முறையும் சிறை சென்றாா். அப்படிப்பட்ட நபருக்கு பாரத ரத்னா வருது வழங்கி கெளரவிக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் முடிவால், நாட்டின் ஒட்டு மொத்த ஓ.பி.சி. சமூகத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்’ என்றாா்.