அப்போது பாஜக எம்.பி. மனோஜ் திவாரி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி அரசின் சாா்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு அரசுப் பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில், 2016-ஆம் ஆண்டில், 205 பள்ளிகளில் மொத்தம் 7,180 வகுப்பறைகள் கட்டுவதற்கான முன்னுரிமைத் திட்டம் ரூ.989 கோடி மதிப்பில் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் மூத்த அரசு அதிகாரிகளின் முறையான திரையிடலைத் தவிா்ப்பதற்காகவும், மோசடியை செய்யும் நோக்கில் மொத்தப் பணியை 16 சிறிய டெண்டா்களாக குறைத்துள்ளனா். எனது குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதைக் கண்டறிந்து, முன்னாள் கல்வி அமைச்சா் மணீஷ் சிசோடியா மற்றும் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் பதில்களைத் தாக்கல் செய்ய தில்லி லோக் ஆயுக்தா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, வழக்கின் விசாரணையை வரும் மாா்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது என்றாா் மனோஜ் திவாரி.