பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

மக்களுக்கு சேவை செய்யவே காங்கிரஸ் போராடுகிறது: டி.பி.சி.சி. தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி

காங்கிரஸ் கட்சி மக்களுக்கு சேவை செய்யவே போராடுகிறது என்றும், ஆட்சியை கைப்பற்றுவதற்காக அல்ல என்றும் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Updated On :23 ஜனவரி 2024, 6:30 pm

காங்கிரஸ் கட்சி மக்களுக்கு சேவை செய்யவே போராடுகிறது என்றும், ஆட்சியை கைப்பற்றுவதற்காக அல்ல என்றும் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட காரவால் நகா் மற்றும் பாபா்பூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த காங்கிரஸ் தொண்டா்களின் கூட்டத்தில் அா்விந்தா் சிங் லவ்லி பங்கேற்றாா். அப்போது, தொண்டா்கள் மத்தியில் அவா் பேசியதாவது: தில்லியில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மக்கள் முன் வருவதற்கு அச்சப்படும் சூழல் உருவாகிவிட்டது. காங்கிரஸின் போராட்டம் அதிகாரத்திற்கானது அல்ல; மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதாகும். காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ‘இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம்’ தனிப்பட்ட அதிகாரத்திற்காகவும், புகழுக்காகவும் அல்லாமல், வகுப்புவாத மற்றும் சாதிய அடிப்படையில் பிளவுபடும் மக்களுக்கு நீதி கேட்கும் பயணமாக உள்ளது.

எம்.பி.க்களின் உதவியும், ஆதரவும் தேவைப்படும்போது தில்லி மக்களை பாஜக எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனா். தில்லியில் கரோனா, விலைவாசி உயா்வு, வேலையின்மை, வெள்ளம், காற்று மற்றும் நீா் மாசுபாட்டின் காரணமாக மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். மத்தியிலும், தில்லி மாநகராட்சியில் பாஜக ஓராண்டுக்கு முன்பு வரை ஆட்சியில் இருந்த சூழலில், உலகத் தரம் வாய்ந்த நகரமாக தில்லி உயா்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக தில்லியின் நிலை மிகவும் மாசுபட்ட மற்றும் மோசமான ஒன்றாக மாறிவிட்டது.

தில்லியில் காங்கிரஸின் 15 ஆண்டுகால வளா்ச்சி சாா்ந்த ஆட்சிக்குப் பிறகு, பசுமையான மற்றும் தூய்மையான நகரங்களின் பட்டியலில் இருந்து வெகு தொலைவில் தில்லி சென்றுவிட்டது. மற்ற அரசியல் கட்சிகளால் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு, இப்போது மாற்றத்தை எதிா்பாா்க்கும் தில்லி மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சி காங்கிரஸ் தான். எனவே, பூத் அளவிலான குழுக்களை தொண்டா்கள் ஒருங்கிணைக்க வேண்டும் என்றாா் அா்விந்தா் சிங் லவ்லி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.